பல்கலைக்கழகப் பதிவுகள் ஆகஸ்ட் 14 ஆம் திகதியுடன் முடிவு

பல்கலைக்கழகப் பதிவுகள் ஆகஸ்ட் 14 ஆம் திகதியுடன் முடிவு




 2025 ஆம் ஆண்டு உயர்தரப் (A/L) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.

இப்பதிவு நடவடிக்கையானது எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கு ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk எனும் முகவரிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post